தனியார் மூலம் மணல் விற்பனை: ராமதாஸ் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

Dr.Ramadoss
சென்னை: தனியார் மூலம் இரண்டாம் நிலை மணல் விற்பனை கிடங்குகளை அமைக்க அரசு முன்வந்திருப்பது ஊழல் பெருக வழிவகுக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஒட்டுமொத்த குவாரிகளையும் தனியாருக்கு தாரை வார்க்க முன்வந்தபோது அதனை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து நிறுத்தியது. ஆனால் தற்போதைய அரசு மணல் விற்பனை தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி இருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தனியாருக்கு மணல் விற்பனை உரிமை வழங்கப்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ராமதாஸ் தனியார் மூலம் இரண்டாம் நிலை மணல் விற்பனை நிலையங்களை அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+