அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தை கொலை செய்து விட்டன.. ராமதாஸ் ஆவேசம்
சென்னை: அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்து விட்டனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

தமிழகசட்டசபையில் இன்று நடந்த வன்முறைக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டாக்டர் ராமதாஸும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவும், திமுகவும் ஜனநாயகத்தை போட்டிப் போட்டுக் கொண்டு படுகொலை செய்கின்றனர். மக்கள் மன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 18, 2017
அவர் விடுத்துள்ள ஒரு டிவீட்டில், அதிமுகவும், திமுகவும் ஜனநாயகத்தை போட்டிப் போட்டுக் கொண்டு படுகொலை செய்கின்றனர். மக்கள் மன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
வன்முறை வெறியாட்டங்களின் மூலம் வாக்களித்த மக்களை அவமானத்தில் கூனிக் குறுக வைத்துள்ளனர் சட்டப்பேரவை உறுப்பினர்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 18, 2017
ராமதாஸ் போட்டுள்ள இன்னொரு டிவீட்டில், வன்முறை வெறியாட்டங்களின் மூலம் வாக்களித்த மக்களை அவமானத்தில் கூனிக் குறுக வைத்துள்ளனர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: மைக் உடைப்பதும், நாற்காலியை பிளப்பதும் தான் மக்கள் பிரதிநிதிகளின் செயலா?
— Dr S RAMADOSS (@drramadoss) February 18, 2017
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: மைக் உடைப்பதும், நாற்காலியை பிளப்பதும் தான் மக்கள் பிரதிநிதிகளின் செயலா? என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications