Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் நடப்பது வெட்கம் கெட்ட ஆட்சி.. டாக்டர் ராமதாஸ் காட்டம்

தமிழகத்தில் நடப்பது வெட்கம் கெட்ட ஆட்சி என்று ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி பாமக சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் வெட்கம் கெட்ட ஆட்சி நடக்கிறது என்று காட்டமாக பேசினார்.

100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீரும் கிடைக்காமல், பருவ மழையால் கிடைக்கும் நீரும் கிடைக்காமல் வறட்சியின் பிடியில் தமிழகம் வாடி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாமக சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Dr. Ramadoss slams Tamil Nadu government over drought

இந்தப் போராட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

எலிக்கறி தின்னும் நிலைக்குத்தான் விவசாயிகளை தமிழக அரசு வைத்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பது வெட்கம் கெட்ட ஆட்சி. இங்கு மக்களும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை, அமைச்சர்களும் சரியில்லை, விவசாய சங்கங்களும் சரியில்லை. விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை, குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை, இனி கிடைக்கப் போவதும் கிடையாது.

மக்கள் பட்டினி கிடந்து சாகிறார்கள். கிட்டத்தட்ட 190 பேர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். காய்ந்த வயலைப் பார்த்து எந்த விவசாயி உயிரோடு இருக்க முடியும். கண்டிப்பாக அவருக்கு மாரடைப்பு வரத்தாய் செய்யும்.

வறட்சி நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட வேண்டும். தஞ்சையில் விவசாயிகள் போராடி இருந்தால் ஒரு அமைச்சர் கூட உள்ளே நுழைந்திருக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+