நேதாஜி ஆவணங்கள் தொடர்பாக மோடி அன்று சொன்னது என்னாச்சு?.. கேட்கிறார் ராமதாஸ்
சென்னை: நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடுவது நாட்டின் கடமை என்று பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு கூறினார் நரேந்திர மோடி. ஆனால் பிரதமர் பதவிக்கு வந்து இத்தனை காலமாகியும் அதுகுறித்துப் பேசாமல் மெளனம் காப்பது வருத்தம் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகில் உடைக்கப்படாத மர்மங்களில் முதன்மையானது இந்திய விடுதலைக்காக படை அமைத்து போராடிய சுபாஷ் சந்திரபோசின் இறுதிக்காலம் ஆகும். இந்த மர்மத்திற்கு விடை காணும் முயற்சிகளின் தொடக்கமாக நேதாஜி பற்றிய 64 ஆவணங்கள் வரும் 18 ஆம் தேதி கொல்கத்தாவில் வெளியிடப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இந்திய விடுதலை அறவழியில் சாத்தியமாகாது; ஆயுத வழியில் தான் சாத்தியமாகும் என்பதில் உறுதியாக இருந்தவர் நேதாஜி. இதற்காக பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று படைகளையும் திரட்டினார். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. 18.08.1945 அன்று நேதாஜி பயணித்த விமானம் தைவான் நாட்டில் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் தங்களது நாட்டில் விமான விபத்து எதுவும் நடக்கவில்லை என்று தைவான் கூறிவிட்டது.
பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும் அவர் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்பதை உறுதி செய்தது. நேதாஜி ரஷ்யாவில் வாழ்ந்தார் என்றும், சீனத்தில் வாழ்ந்தார் என்றும் செய்திகள் உலவின.
உத்தரப்பிரதேசத்தில் பகவான்ஜி என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டு வரை துறவியாக வாழ்ந்து மறைந்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இவற்றில் எதையும் உறுதி செய்ய முடியவில்லை. நேதாஜி குறித்த மர்மம் 70 ஆண்டுகளாக நீடிக்கிறது.
இந்திய மண்ணை மீட்க வேண்டும் என்பதற்காக பல நாடுகளுக்குச் சென்று படை திரட்டிய ஒரு தலைவர் எந்த மண்ணில் வாழ்ந்தார், எந்த மண்ணில் மறைந்தார் என்பதைக் கூட வரலாற்றில் பதிவு செய்யாமல் இருப்பது அந்த தலைவருக்கு செய்யப்படும் அவமரியாதை ஆகும். லட்சக்கணக்கான இளைஞர்கள் நேதாஜியை தங்களின் முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் கொண்டிருந்தனர்; இப்போதும் இளைஞர்களைக் கவர்ந்த புரட்சியாளர்கள் வரிசையில் நேதாஜிக்கு இடம் உண்டு. ஆனால், அவரது இறுதிக்காலம் குறித்த தகவல்களை மத்திய அரசு திட்டமிட்டே மறைப்பது சரியல்ல.
நேதாஜியின் உறவினர்களை நேரு அரசு உளவு பார்த்ததாக சில ஆண்டுகளுக்கு முன் தகவல்கள் வெளியாயின. இத்தகைய சூழலில் நேதாஜி குறித்த ஆவணங்கள் மறைக்கப்படுவது பல யூகங்களை ஏற்படுத்துகிறது.
மேற்கு வங்க அரசு வெளியிடவிருக்கும் 64 ஆவணங்கள் மூலம் நேதாஜியின் இறுதிக் காலம் தொடர்பான சில உண்மைகள் வெளியாகும் என்ற போதிலும், அனைத்து மர்மங்களும் விலகும் என எதிர்பார்க்க முடியாது. மத்திய அரசிடம் இருக்கும் ஆவணங்களின் மூலம் தான் இந்த மர்மங்களை போக்க முடியும். நேதாஜி தொடர்பாக தங்களிடமுள்ள ஆவணங்களை மேற்கு வங்க அரசால் வெளியிட முடியும் போது, மத்திய அரசால் ஏன் வெளியிட முடியாது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட வேண்டிய கடமை நரேந்திர மோடி அரசுக்கு அதிகமுள்ளது.
பிரதமராவதற்கு முன்பே குஜராத் முதல்வர் என்ற முறையில் கொல்கத்தா சென்ற மோடியை 09.04.2013 அன்று நேதாஜியின் உறவினர்கள் சந்தித்து நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட உதவும்படி கோரினர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 2014 ஆம் ஆண்டு லோக்சபாத் தேர்தல் பரப்புரையின் போது பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நேதாஜி குறித்த ஆவணங்கள் வெளியிடப்படும் என்று அப்போதைய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வாக்குறுதி அளித்தார்.
கடந்த மே மாதம் 9 ஆம் தேதி நேதாஜி குடும்பத்தினர் பிரதமரை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, தங்களின் கோரிக்கைகள் குறித்து நினைவூட்டிய போது, இதை மக்களின் கோரிக்கை என்று கூறாதீர்கள்... நாட்டின் கடமை என்று கூறுங்கள் என்று கூறி அக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அதன்பின் 4 மாதங்கள் ஆன பிறகும் அதற்காக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
நேதாஜி குறித்த ஆவணங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தபோது, நேதாஜி பற்றிய தகவல்களை வெளியிட்டால் பல நாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அவற்றை வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. வெளியுறவு விஷயங்களைக் காரணம் காட்டி ஒரு தேசத் தலைவர் குறித்த உண்மைகள் மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே, நேதாஜி பற்றி தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.
-
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications