Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசின் புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களுக்கு எதிரானது : வைகோ

மத்திய அரசின் புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களுக்கு எதிரானது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில், சுற்றுலாத் திட்டங்கள், பாதுகாப்பு திட்டங்கள், சாலைகள் அமைப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Draft CRZ plan need to withdrawn says Vaiko

இதன் மூலம், சாகர் மாலா திட்டம், நீலப் பொருளாதாரக் கொள்கை போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியும். இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள். இதனால் நாகை, காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இந்த புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 1991ம் ஆண்டு வரைவு அறிக்கை மத்திய அரசின் திட்டங்களுக்குத் தடையாக இருப்பதால்,புதிய வரைவு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், கடலை மத்திய அரசு கையகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+