தமிழகத்தில் 5.95 கோடி வாக்காளர்கள்... வரைவு வாக்காளர் பட்டியலை வெளியீடு
தமிழகத்தில் மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்து வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபரில் வெளியிடப்படும்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அதில் தமிழகத்தில் மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

ஆண், பெண்கள் எத்தனை
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5,95,88,002 ஆகும். அவற்றுள் ஆண் வாக்காளர்கள் 2,94,84,492 எண்ணிக்கையும், பெண்கள் 3,00,98,268 எண்ணிக்கையும், 3-ஆவது பாலினத்தவர்கள் 5,242 எண்ணிக்கையும் உள்ளனர்.

சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள்
அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6,34,405 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுள் பெண்கள் மட்டும் 3,10, 542 பேர் உள்ளனர். குறைந்தபட்சமாக கீழ்வேளூரில் 1,68,275 வாக்காளர்கள் உள்ளனர். 130 வாக்காளர்களுடன் மதுரவாயலில் திருநங்கைகள் அதிகமாக உள்ளனர்.

சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்
இந்த பட்டியலில் பெயர் நீக்கம், சேர்ப்பு, இடமாற்றம், திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்.

ஜனவரி மாதத்தில் புதிய பட்டியல்
வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடந்த சிறப்பு பணி மூலம் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தோம். ஜனவரி முதல் வாரத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications