சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகிறது தேர்தல் ஆணையம்... வரும் 15ல் வரைவு வாக்காளர்பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை செயலகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
வருகிற 15ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான மனு அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

2016 சட்டசபை தேர்தல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக சார்பில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இணை செயலாளர் பரந்தாமன், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், தேமுதிக சார்பில் செந்தாமரை கண்ணன், சிபிஎம் சார்பில் பாக்கிய ரமணி, காங்கிரஸ் சார்பில் தணிகாச்சலம், பாஜ சார்பில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்திப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வரும் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல, elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலின் நகல்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கும் வழங்கப்படும்.
தமிழகத்தில் கடந்த 5.1.2015 ஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.62 கோடியாகும். அதன்பிறகு நடைபெற்ற பல்வேறு சிறப்பு முகாம்களின் மூலம் 4.20 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 5.05 லட்சம் வாக்காளர்கள் இடம் மாற்றம் குறித்து மாற்றம் செய்துள்ளனர்.
அதேபோல, வாக்காளர் இறப்பு, இரட்டை வாக்காளர் பதிவு போன்ற காரணங்களுக்காக 3.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாம்களுக்கு பிறகு தற்போதைய தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.68 கோடியாகும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் வரும் 20ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 4ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் தமிழகம் முழுவதும் நடைபெறும்.
பெயர் சேர்க்க விரும்பும் குடிமகன்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 28,850 இடங்களில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications