சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகிறது தேர்தல் ஆணையம்... வரும் 15ல் வரைவு வாக்காளர்பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை செயலகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
வருகிற 15ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான மனு அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

2016 சட்டசபை தேர்தல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக சார்பில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இணை செயலாளர் பரந்தாமன், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், தேமுதிக சார்பில் செந்தாமரை கண்ணன், சிபிஎம் சார்பில் பாக்கிய ரமணி, காங்கிரஸ் சார்பில் தணிகாச்சலம், பாஜ சார்பில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்திப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வரும் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல, elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலின் நகல்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கும் வழங்கப்படும்.
தமிழகத்தில் கடந்த 5.1.2015 ஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.62 கோடியாகும். அதன்பிறகு நடைபெற்ற பல்வேறு சிறப்பு முகாம்களின் மூலம் 4.20 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 5.05 லட்சம் வாக்காளர்கள் இடம் மாற்றம் குறித்து மாற்றம் செய்துள்ளனர்.
அதேபோல, வாக்காளர் இறப்பு, இரட்டை வாக்காளர் பதிவு போன்ற காரணங்களுக்காக 3.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாம்களுக்கு பிறகு தற்போதைய தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.68 கோடியாகும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் வரும் 20ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 4ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் தமிழகம் முழுவதும் நடைபெறும்.
பெயர் சேர்க்க விரும்பும் குடிமகன்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 28,850 இடங்களில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications