சென்னையில் இரவு, அதிகாலையில் லேசான மழை.... கிளம்பியது புழுக்கம்
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவிலும், அதிகாலையிலும், காலையிலும் லேசான மழை பெய்தது.
இந்த மழையால் குளுமை ஏற்படுவதற்குப் பதில் லேசான புழுக்கமே கிளம்பியது.
கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் பனிப் பொழிவு குறைந்திருந்தது. இரவில் புழுக்கமும் வரத் தொடங்கியது. இதனால் வெயில் காலத்தின் தொடக்கம் தலை காட்டத் தொடங்குகிறதோ என்று மக்கள் பீதி அடைய ஆரம்பித்தனர். அதற்கேற்ப பகலிலும் நல்ல வெயில் அடித்து வந்தது.

ஆனால் நேற்று காலை முதலே வானம் மோடமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் அதிகாலைவாக்கில் லேசான மழை பெய்தது. நகரின் பல பகுதிகளிலும், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது.
நகரில் சேப்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு நல்ல மழை பெய்தது.
காலையில் லேசான தூறல் காணப்பட்டது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், கொஞ்சம் பலமா பெய்தா லீவு கிடைக்குமே என்ற ஏக்கப் பெருமூச்சு விட்டனர். இருப்பினும் மழை நின்று விட்டது.
புதுவையிலும்
புதுச்சேரியில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் ஜாலியாக அந்த குளுமையான சூழலை அனுபவித்தனர்.
வழக்கமாக பிப்ரவரியில் மழை இருக்காது. ஆனால் இப்போது திடீரென வந்த மழையால் மக்கள் சற்றே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications