நெடுவாசல் போராட்டக்குழுவுடன் டிஆர்ஓ பேச்சுவார்த்தை - ஆட்சியரிடம் பேச அழைப்பு
நெடுவாசல் போராட்டக்குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியரிடம் பேச வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் போராட்டக்குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை எதிர்த்து கடந்த 16 நாட்களாக கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. போராட்டம் முடிவுக்கு வருமா? தொடருமா என்பது பற்றி இன்று முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கிராம மக்களும், மாணவர்களும் போராட்ட களத்தில் குவிந்து வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனினும் மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே திட்டத்தைக் கைவிடுவோம் என்று நெடுவாசல் கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி தலைமையில் நெடுவாசல் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது ஏடிஎஸ்பி தங்கத்துரையும் பங்கேற்றார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டக்குழுவினர் அவர்களுடைய கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக எழுதித்தருமாறு வலியுறுத்தியதாக கிராம மக்கள் கூறினர். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை போராட்டக்களத்தில் இருந்து வெளியேற்றவும் கோரிக்கை வைத்தாக கூறினார். நெடுவாசல் போராட்டம் விரைவில் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications