நெடுவாசல் போராட்டக்குழுவுடன் டிஆர்ஓ பேச்சுவார்த்தை - ஆட்சியரிடம் பேச அழைப்பு
நெடுவாசல் போராட்டக்குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியரிடம் பேச வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் போராட்டக்குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை எதிர்த்து கடந்த 16 நாட்களாக கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. போராட்டம் முடிவுக்கு வருமா? தொடருமா என்பது பற்றி இன்று முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கிராம மக்களும், மாணவர்களும் போராட்ட களத்தில் குவிந்து வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனினும் மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே திட்டத்தைக் கைவிடுவோம் என்று நெடுவாசல் கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி தலைமையில் நெடுவாசல் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது ஏடிஎஸ்பி தங்கத்துரையும் பங்கேற்றார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டக்குழுவினர் அவர்களுடைய கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக எழுதித்தருமாறு வலியுறுத்தியதாக கிராம மக்கள் கூறினர். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை போராட்டக்களத்தில் இருந்து வெளியேற்றவும் கோரிக்கை வைத்தாக கூறினார். நெடுவாசல் போராட்டம் விரைவில் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications