சென்னை கோயம்பேடில் 14 கிலோ கேட்டமைன் போதைபொருள் பறிமுதல் - 2 பேர் கைது
சென்னை கோயம்பேடு அருகே வாகன சோதனையில், 14.65 கிலோ கேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கேட்டமைன் போதை மருந்தை மலேசியாவுக்கு கடத்த முயன்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், ஒசூரைச் சேர்ந்த பாலமுருகன், சென்னையைச் சேர்ந்த அப்துல்கரீம் என்பதும், 14.65 கிலோ கேட்டமைன் என்ற போதை மருந்தை சென்னையிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தவிருந்த கேட்டமனையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 1 கோடி ரூபாய் எனகூறப்படுகிறது. இக்கடத்தல் தொடர்பாக மேலும் ஒருவரை போதை மருந்து தடுப்பு போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications