சார் ஒரு கட்டிங்!... போலீஸை கடுப்படிக்கும் குடிமகன்கள்!
சென்னை: மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் போலீஸ் பந்தோபஸ்தோடு குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளுக்குப் போய் சரக்கு வாங்கி வருகின்றனர். கோவில்கள், அரசியல்வாதிகள், பேரணிகளுக்கு பந்தோபஸ்த் போன காலம் போய் இப்போது டாஸ்மாக் கடைகளுக்கு பந்தோபஸ்த் போட வேண்டிய காலம் வந்து விட்டது.
என்னடா இந்த தமிழக காவல்துறைக்கு வந்த சோதனை என்று தலையில் அடித்துக்கொண்டாலும், டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு பாதுகாப்புக்காக நிற்கும் போலீஸாரை ‘சார்... ஒரு கட்டிங் போடலாமா?' என்று குடிமகன்கள் வம்புக்கு இழுப்பது வேறு போலீசாருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
|
குடிச்சா பிடிப்பீங்களா?
மது அருந்திவிட்டு போனால் பிடித்து மாமுல் வாங்கிய காலம் போய், போலீஸ் பாதுகாப்பு இருக்கும் பாரில் போய் குடித்துவிட்டு கூலாக பைக்கில் போகின்றனர் குடிமகன்கள்.இந்த குடிகாரர்களின் அலம்பல் தாங்காமல் போலீஸார் தலைகுனிந்து நிற்கிறார்கள்.
|
கழுவி கழுவி ஊத்துறாங்கப்பா
குடித்துவிட்டு போதையில் பேசுவதை சும்மாவே கேட்கமுடியாது. இதில் போலீஸ் பாதுகாப்பு வேற இருக்கா, மதுவிலக்கு போராட்டக்காரர்களை கழுவி கழுவி ஊற்றுகிறார்களாம். காவலுக்கு நிற்கும் பெண் போலீசாரின் பாடுதான் படுமோசமாம்.
|
நாத்தம் தாங்கலையேப்பா
நாள்பூராவும் சாராயக் கடை வாசலில் பணி என்பதால், குடிப்பழக்கமே இல்லாத போலீஸார் பலர் அங்கு காணும் அசிங்கங்களைப் பார்த்து, பொறுக்க முடியாமல் வாந்தி எடுக்கிறார்களாம். போகிற போக்கைப் பார்த்தால் நாமளும் குடிக்கு அடிமையாகிவிடுவோமோ என்று அஞ்சுகிறார்களாம்.

விடிவு எப்போது?
சாராயக் கடை வாசலில் பெண் போலீஸார் முன்பு குத்தாட்டம் போட்டு வெறுப்பேற்றுகிறார்களாம். இது எப்ப விடிவுகாலம் வருமோ? என்று உயர் போலீஸ் அதிகாரிகளே பேசத் தொடங்கியுள்ளார்களாம்.

முதல்வர் கவனத்திற்கு
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கொடியேற்றிவிட்டு முதல்வர், தனது உரையில் மதுவிலக்கு பற்றிய சில அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கலாம். அது பூரண மதுவிலக்கா அல்லது படிப்படியாக மதுவிலக்கா என்று தெரியவில்லை.

அறிவிப்பு வெளியாகும்
பள்ளிகள், கோயில்கள் அருகில் உள்ள கடைகளை எடுப்பது முதல் டாஸ்மாக் கடைகளுக்கான நேரத்தைக் குறைப்பது, குடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்துவது என்று சில அறிவிப்புகளை முதல்வர் செய்யலாம் என்கிறார்கள்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications