வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் முழுஅடைப்பு: எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்
Recommended Video

கன்னியாகுமரி : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் தமிழக எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடமாநிலங்களில் இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கேரளாவில் தலித் அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கையாக தமிழக எல்லைகளிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாகர்கோவில் களியக்காவிளை, திங்கள்சந்தை உள்ளிட்ட இடங்களில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாள்தோறும் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று நடைபெறும் முழு அடைப்பிற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாத பட்சத்திலும் பேருந்துகள் பாதுகாப்பு கருதி களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பேருந்து சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்பதால் களியக்காவிளை சென்று அங்கிருந்து கேரள மாநில பேருந்துகளில் மக்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று தென்காசியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செங்கோட்டை வழியாகவே கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பூ, பால் உள்ளிட்டவை எடுத்து செல்லப்படுகின்றன. பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பூக்கள், பால் தேக்கம் அடைந்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications