வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் முழுஅடைப்பு: எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்
Recommended Video

கன்னியாகுமரி : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் தமிழக எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடமாநிலங்களில் இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கேரளாவில் தலித் அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கையாக தமிழக எல்லைகளிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாகர்கோவில் களியக்காவிளை, திங்கள்சந்தை உள்ளிட்ட இடங்களில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாள்தோறும் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று நடைபெறும் முழு அடைப்பிற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாத பட்சத்திலும் பேருந்துகள் பாதுகாப்பு கருதி களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பேருந்து சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்பதால் களியக்காவிளை சென்று அங்கிருந்து கேரள மாநில பேருந்துகளில் மக்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று தென்காசியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செங்கோட்டை வழியாகவே கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பூ, பால் உள்ளிட்டவை எடுத்து செல்லப்படுகின்றன. பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பூக்கள், பால் தேக்கம் அடைந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications