கன மழை எதிரொலி புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
கன மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் நகரங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருவதால் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய வட கிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது.

நேற்று புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. எனவே இன்று திங்கள்கிழமை பள்ளிகள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அங்கு காலையில் இருந்து கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இதனால் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் இருக்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications