காசு,பணம் துட்டு மழை... ஆர்கே நகரில் அதகளம்.. அமைச்சர் கார் கண்ணாடி உடைப்பு!
ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து அமைச்சர் உதயகுமாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
Recommended Video

சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் பணப்பட்டுவாடா செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அமைச்சர் உதயகுமாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இன்று ஆளும் கட்சியினர் பண விநியோகம் செய்வதாக திமுக மற்றும் தினகரன் அணியினர் புகார் தெரிவித்திருந்தனர்.

புதிய 2 ஆயிரம் நோட்டுகள் அடங்கிய கட்டுக்கட்டான நோட்டுகளுடன் ரூ.13 லட்சம் வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் பிடிபட்டுள்ளார். இதனிடையே பண விநியோகம் செய்வதற்காக வந்ததாக குற்றம்சாட்டி ஒரு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கார் என்று சொல்லப்படுகிறது.

டிஎன் 48 கே 9009 என்ற எண் கொண்ட சிவப்பு நிற இன்னோவா காரின் முன்பக்கத்தில் தமிழக அரசின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. கட்சிக் கொடி நீக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த காரைத் தான் தினகரன் தரப்பினர் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து தினகரன் தரப்பினர் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications