சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் விடுதலை

Subscribe to Oneindia Tamil

வேலூர் : திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து தற்போது இருவரும் விடுதலையாகியுள்ளனர்.

துரைமுருகனுக்கு சொந்தமான சென்னை மற்றும் காட்பாடி பகுதியிலுள்ள வீடுகள், கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என 9 இடங்களில் கடந்த 2011ம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Durai Murugan release in court in assets case

துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து குவித்ததாக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு வேலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று வேலூர் நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தட்சிணாமூர்த்தி இந்த வழக்கில் இருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துகுவிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+