இறந்தும் போராடிய கருணாநிதி வாங்கித் தந்த இன்னொரு வெற்றி இது- துரைமுருகன்
இறந்தும் போராடிய கருணாநிதி வாங்கித் தந்த இன்னொரு வெற்றி இது என்று துரைமுருகன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: இறந்தும் போராடிய கருணாநிதி வாங்கித் தந்த இன்னொரு வெற்றிதான் இது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
கருணாநிதி நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது விருப்பத்தின் படி அவரது உடலை அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுகவினர் அனுமதி கேட்டனர்.

மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சட்டச் சிக்கல் உள்ளதால் காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கி தருகிறோம் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடினார்.
நேற்றைய தினம் இது அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று காலை காரசாரமான பல்வேறு முன்னுதாரணங்களுக்கு மத்தியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் தீர்ப்பு வழங்கினார்.
அதில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்டாலினும் கண்ணீர் மல்க கைகூப்பி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில் இறந்தும் போராடிய கருணாநிதி வாங்கித் தந்த இன்னொரு வெற்றி இது என்றார்.












Click it and Unblock the Notifications