பரபரப்பான அரசியல் சூழல்! மே 20-ல் கூடும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு! துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் மே 20ஆம் தேதி சென்னையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தொடர்பாக துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

''கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.5.2023 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.
அதுபோது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications