சட்டசபையில் ஜெ. இல்லாமல் போய்விட்டாரே... ரொம்பவே வருந்தும் துரைமுருகன்
சட்டசபையில் ஜெயலலிதா இல்லாதது வருத்தமாக இருக்கிறது என திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதா இல்லாமல் போனது மிகவும் வருத்தம் அளிப்பதாக திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பேசியுள்ளார்.
வேலூரில் திமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு,க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசியதாவது:
கருணாநிதி நலமுடன் உள்ளார். நாள்தோறும் அவர் பத்திரிகைகளை படிக்க சொல்லி கேட்டுக்கொள்கிறார். யாரைப் பிடிக்கும் என டாக்டர் கேட்டார். அதற்கு அண்ணாவைப் பிடிக்கும் என்றார் கருணாநிதி.
சட்டசபையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது பெரும் சோகமாக உள்ளது. அவர் உயிருடன் இருந்தகாலத்தில் அந்த கட்சியில் இருந்த கட்டுப்பாடு இப்போது இல்லை.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications