திமுக கட்சியின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டது.. துரைமுருகன் பேட்டி
ஆர். கே நகர் தேர்தலில் திமுக கட்சியின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது என துரைமுருகன் பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: ஆர். கே நகர் தேர்தலில் திமுக கட்சியின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது என துரைமுருகன் பேட்டி அளித்து இருக்கிறார்.
ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணும் பணி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் கடந்த 9 சுற்றுகளாக தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த நிலையில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ஆர்.கே நகர் பகுதியை சேர்ந்த அவர் இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வாக்குகள் வரவில்லை.
திமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்ததை குறித்து திமுக கட்சி உறுப்பினர் துரைமுருகன் பேட்டியளித்தார். அதில் ''ஆர்.கே நகர் தேர்தலில் திமுக கட்சியின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது. ஆர்.கே நகரில் ஜனநாயகம் தோற்றுவிட்டது, பணநாயகம் வென்றுவிட்டது. பணத்தின் காரணத்தால் திமுக தோற்றுவிட்டது'' என்று குறிப்பிட்டார்.
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டு இருக்கும் சமயத்தில், மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக பாஜக, திமுக, மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.