Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதிக்கு மெரீனாவை ஒதுக்க ஆட்சேபனை இல்லை.. டிராபிக் ராமசாமி வக்கீலும் சம்மதம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது திமுக

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு வசதியாக தாங்கள் தொடர்ந்திருந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர்கள் துரைசாமி, பாமக பாலு ஆகியோர் இன்று தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் முன்பு நேரில் ஆஜராகி தெரிவித்தனர். முதலில் ஆட்சேபனை தெரிவித்த டிராபிக் ராமசாமி வக்கீல் பின்னர் தானும் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

    திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரீனா பீச்சில், அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த இடத்தை வழங்க தமிழக அரசு மறுத்து விட்டது. இதற்கு அது கூறிய காரணம் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் துரைசாமி, பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்குகள் என்பதே.

    Traffic Ramasamy, Duraisamy and PMK Balu withdraw their cases for Karunanidhi

    இந்த நிலையில் இந்த விவகாரத்தை தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் முன்பு கொண்டு போயுள்ளது திமுக. ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு அனுமதி கோரி திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகளும் ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் வீட்டில் வைத்து இன்று இரவு அவசர வழக்காக இது விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் சிஎஸ் வைத்தியநாதன் ஆஜரானார். மறுபக்கம் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர். இளங்கோ, ஆர். எஸ் பாரதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

    முக்கிய அம்சமாக இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேற்கோள் காட்டிய வழக்குகளைத் தொடர்ந்த துரைசாமி, பாமக பாலு ஆகியோரும் நேரில் ஆஜரானார்கள். இவர்கள் மொத்தமாக 5 வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இதில் நான்கு வழக்குகளை துரைசாமி தொடர்ந்திருந்தார். பாலு ஒரு வழக்கு. இவர்கள் தவிர சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சார்பில் அவரது வழக்கறிஞர் மணிகண்டன் என்பவரும் ஆஜரானார்.

    பாலுவும், துரைசாமியும் தங்களது வழக்குகளை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். ஆனால் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தரக் கூடாது என்று மணிகண்டன் முதலில் வாதிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அனைத்துத் தரப்பு வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் இந்த சூழ்நிலையில் தங்களது தரப்பும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பவில்லை என்று டிராபிக் ராமசாமியின் வழக்கறிஞர் மணிகண்டன் தெரிவித்தார்.

    தற்போது வழக்கு விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+