ஜெயலலிதா மருத்துவ அறிக்கை வெளியிட வேண்டும் - ஈஸ்வரன்
சென்னை: உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை வெளியிட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொங்கு நாடு மக்கள் தேசியகட்சி தலைவர் ஈஸ்வரன் நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்றது. பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குபின் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும். அவருடைய உடல்நிலை பற்றி பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. எனவே அதுதொடர்பாக, தெளிவான மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும். அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. ஆனால் பல்வேறு கருத்துகள் வெளியில் உலவுகின்றன. எனவே உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications