இன்று நள்ளிரவு வரை மின்கட்டணம் கட்டலாம்.. பழைய ரூ.500 நோட்டை கொடுக்கலாம்!
இன்று நள்ளிரவு வரை மின்கட்டண வசூல் மையங்கள் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக இன்று நள்ளிரவு வரை மின் கட்டண வசூல் மையங்கள் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 9ம் தேதியில் இருந்து செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் அன்றாட செலவுகள் செய்வதற்கே முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே மின்சார கட்டணம் கட்டுவதற்கான நேரமும் வந்துவிட்டது. இதனால் எப்படி கட்டணத்தை கட்டுவது என்று தெரியாமல் மக்கள் அல்லல்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்தும் நாளை ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிடப்பட்டது. ஆனால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக இன்று நள்ளிரவு வரை மின் கட்டண மையங்கள் திறந்திருக்கும என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செலுத்தியும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிற்பகல் 2.45 மணி வரை மட்டுமே இயங்கும் மின் கட்டண வசூல் மையங்கள் இன்று நள்ளிரவு வரை செயல்படும். அதனால் மக்கள் கவலைப்படாமல் தங்களது மின் கட்டணங்களை செலுத்ததலாம்.
முன்னதாக, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட மாட்டாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்திருந்த நிலையில் தற்போது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு ஏற்படும் அலைச்சல் சற்று குறைந்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications