மின்சார மீட்டர் தட்டுப்பாட்டால் தள்ளாடும் கட்டுமானப் பணிகள்
நெல்லை: தமிழகத்தில் புதிய மின் இணைப்பு தேவைப்படுவோர் நவீன டிஜிட்டல் மின் மீட்டரையே பயன்படுத்த வேண்டுமென மின் வாரியம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் போதுமான அளவில் மின் மீட்டர் கிடைக்காததால் கட்டுமான பணிகள் முடங்கி போய் உள்ளன.
புதிய மின் மீட்டருக்காக குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் 2 பேரிடமிருந்து மட்டுமே வாங்கி கொடுக்க வேண்டும் என மின் வாரியம் அறிவித்தது. அப்படி கொடுத்தால் மட்டுமே ஆய்வு செய்து இணைப்பு கொடுக்கப்படும் என மின் வாரியம் அறிவித்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சில இடங்களில் மட்டுமே விற்ற அந்த மின் மீட்டரை பெற மக்கள் அலைபாய்ந்தனர். மின் வாரியத்தில் ரூ.700 விற்கப்பட்ட அந்த மின் மீட்டர் வெளி மார்க்கெட்டில் சுமார் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மின் வாரியம் மொத்தமாக கொள்முதல் செய்து டிஜிட்டல் மின் மீட்டர்களை வழங்கியது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக மின் மீட்டர் பற்றாக்குறை குறைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மின் மீட்டர் தட்டுப்பாடு மீண்டும் தலைதூக்கியுள்ளது.
அதனால் பழைய முறைப்படி வெளியில் இருந்து மின் மீட்டர்களை வாங்கி வரும்படி மின் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் ஏற்கனவே ஓப்படைக்கப்பட்ட பழைய மின் மீட்டர்களை வழங்கியும் நிலைமையை சமாளித்து வருகின்றனர்.
மாநகர பகுதிகளில் ஓவ்வொரு மின் வாரிய அலுவலகத்திலும் புதிய இணைப்பு வழங்க கோரி 150 முதல் 300 பேர் வரை காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. மின் மீட்டர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் இணைப்பு கிடைக்காத புதிய குடியிருப்பு மற்றும் வாணிக வாளக கட்டுமான பணிகள் முடிங்கியுள்ளன.
இதுகுறித்து நுகர்வோர் கூறுகையில், கடந்த 1 மாத்திற்கும் மேலாக காத்திருக்கிறோம். மின் மீட்டர் மின் வாரியத்திலும் கிடைக்கவில்லை. தனியாரிடமும் கிடைக்கவில்லை. எப்போது மின் மீட்டர் கிடைக்கும் என தெரியவில்லை. இதனால் புதிதாக வீடு கட்ட கூட முடியாமல் தவித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications