திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுடன் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தலா?
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பெருமளவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக கூறி அந்த தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. பின்னர் தேர்தலை ரத்து செய்துவிட்டது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் உடல் நலக்குறைவு காரணமாக காலமானதால், அந்த தொகுதியில் அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிருபர்களை இன்று லக்கானி சந்தித்தபோது இக்கேள்வி எழுப்பப்பட்டது. சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது அவர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட சீனிவேல் உயிரிழந்தது தொடர்பான தகவல் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவிப்பார். அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கை, வரும் ஜூன் 19ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.105 கோடியே 2 லட்ச ரூபாயில் 47 கோடியே 44 லட்ச ரூபாய் திருப்பித் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications