எவ்வளவு செலவு செய்யுது தேர்தல் ஆணையம்... தேர்தல் அதிகாரிகளை மட்டும் கண்டுகொள்ளாமல் பாரபட்சம் ஏனோ?
சென்னை: தேர்தல்களை சுமூகமாக பலத்த பாதுகாப்புடன் நடத்துவது; 100% வாக்குப் பதிவை எட்டுவது என விழுந்து விழுந்து பிரசாரம் செய்வதில் அக்கறையாக இருக்கும் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகள் முழுமையடைவதில் முதுகெலும்பாக இருக்கும் தேர்தல் பணியாளர்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திப்பது இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.
தேர்தல் பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர்... அதுவும் தேர்தல் ஒழுங்காக பாபரட்சம் நடத்தப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வெவ்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் முன்பின் தெரியாத ஊர்களுக்கு 'டூட்டி' போடப்படுகின்றனர்...

உதாரணமாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை, அதே மாவட்டத்தின் வேடசந்தூர் ஒன்றியத்துக்கு தூக்கி போடுவார்கள்... வேடசந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பகுதிக்கு தூக்கியடிக்கப்படுவார்கள்... சரி அரசுப் பணிதானே இவர்கள் கடமையை செய்துதானே ஆக வேண்டும் என்கிற கேள்வி எழலாம்...
இன்று திங்கள்கிழமை வாக்குப் பதிவு என்றால் இவர்கள் எந்த பகுதிக்கு போகிறோம் என்பது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை கூட தெரியாது...
ஞாயிற்றுக்கிழமையன்று எந்த பகுதியில் தேர்தல் பணி என்பதை தெரிந்து கொள்வதற்காக காலையிலேயே துணிமணி என மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு தேர்தல் அதிகாரிகளின் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும். அவர்கள் எந்த பகுதிக்கு போக சொல்கிறார்களோ இரவோடு இரவாக அங்கே போக வேண்டும். அவர்களுக்கான தங்குமிடம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள்தான்...
பெரும்பாலான தேர்தல் ஊழியர்கள் ஆசிரியையகள்... அவர்களுக்கான அந்த பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பானதாக, கழிவறை வசதிகளுடன் கூடியதாக இருக்கிறதா? இல்லையா? என தெரியாமலே போய் ஆடுமாடு மந்தைகளை போல இறக்கிவிடப்படுவர்கள்... அங்கே போய் பேந்த பேந்த முழிக்கும் இவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி பற்றி அரசோ தேர்தல் ஆணையமோ கவலைப்படுவது கிடையாது...
இப்படி கண்ணைகட்டி காட்டில்விடப்பட்டவர்களாக இருக்கும் இவர்கள் அந்த இரவு முதல் மறுநாள் இரவு ஒவ்வொரு வேளை சாப்பாடுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் என்ன செய்வது என கை பிசைந்து கொண்டுதான் இந்தியாவின் ஆகப் பெரிய 'ஜனநாயக' கடமையை நிறைவேற்ற தங்களையே 'அர்ப்பணித்துக்' கொண்டிருக்கிறார்கள்...
சில ஊர்களில் ஏற்கனவே இத்தகைய ஜனநாயகக் கடமைக்குப் போய் "அனுபவம்" பெற்ற அரசு ஊழியர்கள் இருப்பார்கள்...அவர்கள்தான் இவர்களை கரிசனத்துடன் அரவணைத்துக் கொள்வகிறார்கள்...
ஆனால் ஒவ்வொரு தேவைக்கும் இப்படி போய் அவர்களிடம் நிற்பதும் தேர்தல் பணியாளர்களால் இயலாத காரியம்தான்... இப்படித்தான் அவ்வளவு மனப்புழுக்கத்துடன் வேதனையுடன்தான் இந்த தேசத்தின் ஆகப் பெரும் ஜனநாயகக் கடமையை செய்து தருகிறார்கள்...
மிகப் பெரிய ஜனநாயகக் கடமைக்கு அடித்தளமாக இருக்கும் இந்த தேர்தல் பணியாளர்கள் எனும் அரசு ஊழியர்களை அடிப்படையில் தேர்தல் காலங்களில் மனிதர்களாக நடத்தி அவர்களுக்காக அடிப்படை தேவைகளையாவது செய்து தர தேர்தல் ஆணையம் முன்வரட்டும்... அப்புறம் நீங்கள் என்ன பிரசாரம் செய்வது?
அவர்களே பிரசார பீரங்கிகளாக மாறி உங்களுக்கான 100% வாக்குப் பதிவை எட்ட வைப்பார்கள்... தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா?
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications