போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள்: எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கை மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: ரூ.214 கோடி செலவில் மியாட் மருத்துவமனை முதல் ராமாபுரம் வழியாக முகலிவாக்கம் வரை பல்லடுக்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும். ரூ.1 கோடி மதிப்பில் மவுண்ட் - பூவிருந்தவல்லி ஆவடி மார்க்கத்தில் பல்லடுக்கு மேம்பாலம் கட்டப்படும்.

குன்றத்தூர், மடிப்பாக்கம், மாடம்பாக்கம் கொரட்டூரில் ஆகிய 4 சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். வழபழனி முதல் அசோக் பில்லர் வரையில் ரூ.380 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படும். தாம்பரம் கிழக்கு புறவழிசாலை அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
ஒரகடம் வாலஜாபாத் சாலையை ஆறு வழி சாலையாக மாற்றுவதற்கு ரூ.185 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஒரகடம் வாலஜாபாத் சாலையை ஆறு வழி சாலையாக மாற்றுவதற்கு ரூ.185 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச்சாலை பணி இந்த ஆண்டே முடித்து பயன்பாட்டுக்கு வரும். மேலும் 6 வழி வெளிவட்டச் சாலை இந்த ஆண்டே மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மதுரை, கோவை மாவட்டங்களில் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். பொள்ளாச்சி, கோபிசெட்டிப்பாளையம், துறையூர் உள்ளிட்ட இடங்களில் புறவழிச் சாலை அமைக்கப்படும். ரூ.1000 கோடியில் 10 இடங்களில் அணைகள் கட்ட திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை வண்டியூர் கண்மாய் ரூ.3.50 கோடியில் புனரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications