கோவை கிளம்பினார் எடப்பாடி பழனிச்சாமி.. ஈஷா யோக மைய சிவராத்திரி விழாவில் மோடியுடன் பங்கேற்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் ஈஷா மையத்தில் நடைபெற உள்ள சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

ஈஷா யோக மையம் சார்பில் நடைபெறும், ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

Edappadi Palanichami left Chennai to participate Isha Yoga center program

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆகியோரும் விழாவுக்கு வருகை தர உள்ளனர். வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து நேரடியாக கோவை சென்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர்கள் சிவராஜ்சிங் சவுகான், வசுந்தரா ரஜேசிந்தியா, தேவேந்திர பட்நாவிஸ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் இதில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மதியம் அவர் சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் கிளம்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+