சசி படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது- சூசகமாக சொன்ன முதல்வர் எடப்பாடி!

சசிகலா படத்தை போஸ்டர்களில் போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தைப் போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தெரிவித்திருத்து அதிமுக (அம்மா) கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக(அம்மா) கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Edappadi palanisamy explains Sasikala missing from poll posters

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், சசிகலா படத்தை வைத்து ஏன் பிரசாரம் செய்யவில்லை என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களே? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, என்ன வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அதை வைத்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். இரட்டை இலைக்கும், இரட்டை விளக்கு மின்கம்பத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க. வுக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது. நிச்சயம் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் என பதிலளித்தார்.

அதாவது சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என்பதைத்தான் சூசகமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே கூறிவிட்டாரே என அதிர்ந்து போயுள்ளனர் அதிமுக (அம்மா) கட்சி தொண்டர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+