பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது: மக்கள் அதிகாரம் ஆவேசம்
மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: டெல்லியில் நீடிக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கண்டுகொள்ளவில்லை என மக்கள் அதிகாரம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது.

மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் தொடரும் வருமான வரித்துறை ரெய்டுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் மதுபானக் கடைகளை எதிர்த்து போராடிவரும் மக்களின் தாக்குதல் நடத்தும் காவல்துறைக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். தமிழக மக்கள் எதிர்கொள்ளும் பிரசனைகள் எதையும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத அரசு இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications