பிடிஆர் ஆடியோ விவகாரம்: அதெல்லாம் லேசில் விட மாட்டோம்.. டெல்லிக்கு போவோம்.. சீறிய எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆடியோவில் இருக்கும் குரல் நிதியமைச்சரின் குரல்தான் என்றும் மத்திய அரசு விசாரணைக்கு வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாட்களாக ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மேலும் அந்த ஆடியோ உரையாடலுக்கு தமிழ் மொழிப்பெயர்ப்பையும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார்.

 Edappadi Palanisamy says that we will take PTR Audio matter to centre

அண்ணாமலை: இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் இந்த ஆடியோ விவகாரத்தில் திமுக அரசு எந்த விளக்கத்தையும் அளிக்காமல் மவுனமாக இருப்பது ஓட்டு போட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த 26 வினாடிகள் ஒலிபரப்பப்பட்ட அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார். மேலும் ஜோடிக்கப்பட்ட ஆடியோ என்பதற்கான ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ குறித்து கேட்கப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பேசியதாக சொல்லப்படும் ஆடியோ பதிவை செய்தியாளர்களுக்கு ஐபேட் மூலம் எடப்பாடி பழனிசாமி போட்டு காட்டினார்.

அமைச்சரே கூறிவிட்டார்: பிறகு எடப்பாடி பழனிசாமி கூறுகையில் அமைச்சரே பேசிவிட்டு புனையப்பட்டது என அவரே எப்படி சொல்ல முடியும். எனவே இதை ஆய்வுக்குள்படுத்த வேண்டும். ரூ 30 ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயமல்ல. 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது என நிதியமைச்சரே வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத்தான் நாங்கள் கருதுகிறோம். இந்த வீடியோ வெளியான போது நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 Edappadi Palanisamy says that we will take PTR Audio matter to centre

அறிக்கை: ஆனால் நிதியமைச்சர் மறுப்பு அறிக்கை வெளியிட்ட பிறகுதான் இதில் ஏதோ இருக்கிறது என தோன்றுகிறது. இது நிச்சயமாக அவருடைய குரலேதான். ரூ 30 ஆயிரம் கோடி பணத்தை என்ன செய்வது, எங்கு வைப்பது என தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே இதை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவோம். ஆளுநரிடமும் இந்த விஷயத்தை கொண்டு செல்வோம். ஒரு நிதியமைச்சர் பேசியிருக்கிறார், அது போலியானதா, உண்மையானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

முதல்வர் அறிக்கை எங்கே: எதற்கெல்லாமோ முதல்வர் அறிக்கை விடுகிறார். இதற்கு விட வேண்டியதுதானே. அந்த ஆடியோ கிளிப்பிங் போலி என சொல்ல வேண்டியதுதானே. அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லாத போது எங்கள் ஆட்சியில் எத்தனை குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர்களிடம் ஆதாரமே இல்லாமல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். 2 ஆண்டுகளாக தேர்வு செய்யப்பட்ட திமுக அரசு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல் கொள்ளையடிப்பதைத்தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர் என்றால் அதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+