குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு குறித்து முதல்வர் தீர்மானிப்பார் - செங்க்ஸ் விளக்கம்: வீடியோ
வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து முதல்வர் எடப்பாடியார் தீர்மானிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் தீர்மானிப்பார். மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபையில் தக்க பதில் தருவோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் தீர்மானம் செய்வார். மேலும் இதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் அதிமுக இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். இந்த அரசு மக்கள் விரும்பும் அரசாக, மக்களுக்கு பல நலத்திட்டங்களைத் தொடர்ந்து செய்து ஆட்சியில் தொடர்ந்து இருக்கும் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறாரே என்ற கேள்விக்கு, அவருக்கு சட்டசபையில் தக்கபதிலைத் தருவோம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.












Click it and Unblock the Notifications