கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்கிறேன், ஆனால் அதை ஜெ.வே செய்தால் நன்றாக இருக்கும்: ஈ.வி.கே.எஸ்.
திருச்சி: திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அக்கட்சி தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை தி.க. தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்கிறேன். ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மகிழ்ச்சி அளிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications