வெள்ள நேரத்தில் ராகுல் வந்தார், கருணாநிதி வந்தார், ஜெயலலிதா வந்தாரா?: இளங்கோவன்
திருவாரூர்: சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மகக்ளை சந்திக்க டெல்லியில் இருந்து ராகுல் காந்தி வந்தார், கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி வந்தார் முதல்வர் ஜெயலலிதா மக்களை கண்டுகொள்ளவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
முதல்வர் ஜெயலலிதா மக்களை சந்திக்காதவர். மக்களை சந்தித்து பேசாத அவருக்கு எப்படி மக்களின் பிரச்சனைகள் தெரியும். சென்னை செம்பரம்பாக்கம் ஏறி திறந்துவிடப்பட்டபோது பெருவெள்ளம் ஏற்பட்டது.
ஜெயலலிதாவோ மக்களை சந்திக்க வரவில்லை. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
ஏன், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து மக்களுக்கு ஆறுதல் கூறினார். ஆனால் இங்கிருக்கும் ஜெயலலிதா மட்டும் வரவில்லை. ஏன் அவர் வரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications