மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப்.. அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் தங்கமணி!
சென்னை: மின்கட்டணம் செலுத்த மொபைல்-ஆப் சேவையை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பேரவைக் கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் தொகுதி கீழ்பிடாரி பேரூராட்சியில் ஏற்கெனவே இருந்த மின் கட்ட வசூல் மையம் வேறு இடத்துக்கு மாற்றியமைக்கப்பட்டுவிட்டதாக அத்தொகுதி உறுப்பினர் அபுபக்கர் தெரிவித்தார்.

மீண்டும் கீழ்பிடாரியில் மின் கட்டண மையத்தை அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மொபைல் ஆப் நடைமுறைக்கு வந்தால், மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை எளிமையாகிவிடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மின் கட்டணம் செலுத்துவதற்கான மொபைல் ஆப் சேவையை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை எளிமையாகும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications