மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப்.. அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் தங்கமணி!
சென்னை: மின்கட்டணம் செலுத்த மொபைல்-ஆப் சேவையை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பேரவைக் கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் தொகுதி கீழ்பிடாரி பேரூராட்சியில் ஏற்கெனவே இருந்த மின் கட்ட வசூல் மையம் வேறு இடத்துக்கு மாற்றியமைக்கப்பட்டுவிட்டதாக அத்தொகுதி உறுப்பினர் அபுபக்கர் தெரிவித்தார்.

மீண்டும் கீழ்பிடாரியில் மின் கட்டண மையத்தை அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மொபைல் ஆப் நடைமுறைக்கு வந்தால், மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை எளிமையாகிவிடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மின் கட்டணம் செலுத்துவதற்கான மொபைல் ஆப் சேவையை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை எளிமையாகும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications