பணம் கொடுத்து செய்தி போட்ட அமைச்சர் தகுதி நீக்கம்.. தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை!
பணம் கொடுத்து செய்தி போட்ட மத்தியப் பிரதேச அமைச்சரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது.
சென்னை: பணம் கொடுத்து செய்தி போட்ட மத்தியப் பிரதேச அமைச்சரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிடவும் தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் தடையும் விதித்துள்ளது.
சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச அரசில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் நரோட்டம் மிஸ்ரா. இவர் கடந்த 2008ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முறையான செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டது மற்றும் ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

இவர் கடந்த 2008ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது செலவுக் கணக்கு குறித்த சில தகவல்களை மிஸ்ரா அளிக்கவில்லை என்று கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பார்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
தகுதி நீக்கம்
இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 7 (பி) அடிப்படையில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதற்காக மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு போட்டியிட தடை
இதனால், அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அவரால் போட்டி போட முடியாது.
தவியிலும் தொடர முடியாது.
தேர்தல் ஆணைய உத்தரவின் காரணமாக அவரால் அமைச்சர் பதவியிலும் தொடர முடியாது.
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.
தனக்கு நீதி கிடைக்கும்
தான் எந்த ஊழலும் செய்யவில்லை என்றும் தான் எந்த மீடியாவுக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும் எந்த மீடியாவும் தன்னிடம் இருந்து பணம் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications