பணம் கொடுத்து செய்தி போட்ட அமைச்சர் தகுதி நீக்கம்.. தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை!
பணம் கொடுத்து செய்தி போட்ட மத்தியப் பிரதேச அமைச்சரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது.
சென்னை: பணம் கொடுத்து செய்தி போட்ட மத்தியப் பிரதேச அமைச்சரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிடவும் தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் தடையும் விதித்துள்ளது.
சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச அரசில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் நரோட்டம் மிஸ்ரா. இவர் கடந்த 2008ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முறையான செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டது மற்றும் ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

இவர் கடந்த 2008ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது செலவுக் கணக்கு குறித்த சில தகவல்களை மிஸ்ரா அளிக்கவில்லை என்று கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பார்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
தகுதி நீக்கம்
இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 7 (பி) அடிப்படையில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதற்காக மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு போட்டியிட தடை
இதனால், அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அவரால் போட்டி போட முடியாது.
தவியிலும் தொடர முடியாது.
தேர்தல் ஆணைய உத்தரவின் காரணமாக அவரால் அமைச்சர் பதவியிலும் தொடர முடியாது.
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.
தனக்கு நீதி கிடைக்கும்
தான் எந்த ஊழலும் செய்யவில்லை என்றும் தான் எந்த மீடியாவுக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும் எந்த மீடியாவும் தன்னிடம் இருந்து பணம் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications