கருணாநிதி குறித்து விமர்சனம்: வைகோவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்தது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீசில், கருணாநிதியை தரக்குறைவாக விமர்சித்தது குறித்து பிற்பகல் 3 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது தனிநபரை விமர்சனம் செய்தது தவறு என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, தேமுதிகவில் இருக்கும் பொறுப்பாளர்களை இழுக்க தி.மு.க. முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதைப்போன்ற பிழைப்பைவிட வேறு ஏதாவது தொழிலை செய்து அவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என தெரிவித்த அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாதஸ்வரம் வாசிக்கும் கலை தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு முழுவதும் வைகோவின் கொடும்பாவிகளை எரித்து தி.மு.க. தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கருணாநிதி தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக வருத்தப்படுவதாக தெரிவித்திருந்த வைகோ, அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications