தேர்தல் முடியும் வரை அம்மா குடிநீர் பாட்டிலில் “இலை” க்குத் தடை
சென்னை: அம்மா குடிநீர் பாட்டிலில் பொறிக்கப்பட்டுள்ள இலை வடிவத்தை மறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக மினி பேருந்துகளில் உள்ள இலை சின்னத்தை மறைக்க கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மினி பேருந்துகளில் உள்ள இலை ஓவியத்தை மறைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இலை ஓவியம் மறைப்பு:
இந்த தீர்ப்பால் சென்னையில் இயக்கப்பட்டு வரும் அனைத்து மினி பேருந்துகளிலும் உள்ள இலை ஓவியம் மறைக்கப்பட்டது.

இலை ஓவியம் மறைப்பு:
இந்த தீர்ப்பால் சென்னையில் இயக்கப்பட்டு வரும் அனைத்து மினி பேருந்துகளிலும் உள்ள இலை ஓவியம் மறைக்கப்பட்டது.

குடிநீரிலும் இரட்டை இலை:
இந்நிலையில்,அம்மா குடிநீர் பாட்டிலில் பொறிக்கப்பட்டுள்ள இலை படத்தை மறைக்க கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த இலை வடிவம் உற்றுப் பார்த்தால் தெரியும் வகையில் பாட்டிலிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இது முன்பே சர்ச்சையானது.

இலைவடிவ பாட்டில்:
ஏற்கனவே தேர்தலை ஒட்டி அப்பாட்டிலில் உள்ள லேபிள்கள் அகற்றப்பட்ட நிலையில், பாட்டிலின் வடிவமைப்பிலேயே "இரட்டை இலை" சின்னம் அமைந்த வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் உத்தரவு:
இதையடுத்து, அம்மா குடிநீர் பாட்டிலில் உள்ள இலை வடிவத்தை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் முடியும் வரை “தடா”:
மேலும், லோக்சபா தேர்தல் முடிவடையும் வரையில் இந்த இலைச் சின்னங்களை பொறிக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பா்டில்கள் மாற்றப்படுமா
தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் இலை வடிவம் பொறிக்கப்பட்டுள்ள பா்ட்டில்களுக்குப் பதில் புதிய பாட்டில்களை அரசு பயன்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications