வந்துட்டாருய்யா... வந்துட்டாரு... தேர்தல் மன்னன் பத்மராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் மன்னன் பத்மராஜன் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான இன்று, முதல் ஆளாக வந்து அவர் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து 169வது முறையாக இவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

Election King Padmarajan files papers for R.K.Nagar

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன். கடந்த 26 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், லோக்சபா, சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார்.

தொடக்கத்தில் பஞ்சர் கடை நடத்திய இவர், பின்னர் சிறிய டயர் தொழிற்சாலைக்கு உரிமையாளரானார். சாதனை முயற்சிக்காக தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார் பத்மராஜன். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வரும் பத்மராஜன், வேட்புமனு அளிப்பதுடன் சரி. பிரச்சாரம் செய்வது கிடையாது. கஜினி முகமதுவை விட அதிக தோல்விகளைத் தழுவியது இவராகத்தான் இருக்கும்.

அது சரி இவருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதில் அப்படி என்ன அலாதி பிரியமோ தெரியலையே?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+