தமிழக - கேரளா எல்லையில் ரூ. 16 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி
செங்கோட்டை: தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 16 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

வாகனச் சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் உரிய ஆவணத்தை காட்டிய உடன் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக - கேரளா எல்லைப் பகுதியான புளியரைல் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சுப்பிரமணியன், காவல்துறை உதவி ஆய்வாளர் கோமதிநாயகம், காவலர்கள் பரமசிவன், ராமசாமி, சரவணபாபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 16 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நடத்திய விசாரணையில் அந்த பணம் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த தனியார் பீடி கம்பெனியின் வசூல் பணம் என்பது தெரிய வந்தது. இருப்பினும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications