திருவாலங்காடு அருகே உயர் மின் கம்பி அறுந்தது : சென்னை - ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை பாதிப்பு
திருவள்ளூர் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால், சென்னை - ஜோலார்பேட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகேயுள்ள திருவாலங்காடு என்கிற இடத்தில் உயர் அழுத்த கம்பிகள் அறுந்து ரயில் பாதையில் விழுந்ததால், சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே திருவாலங்காடு என்கிற இடத்தில் 25 ஆயிரம் வாட்ஸ் திறன் கொண்ட உயர் மின்னழுத்த கம்பி அறுந்து ரயில் பாதையில் விழுந்ததால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து, அறுந்து கிடந்த மின்சார கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடந்த இரண்டு மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டு, அந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த 30ம் தேதி மாலை ஜோலார்பேட்டை அருகே மின்சார உயர் அழுத்தக் கம்பி விழுந்து, அந்தப்பாதையில் 5 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அப்போது மின்வாரிய அதிகாரிகள் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாததே, விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ஊட்டி போறவங்களின் கனவு சார்.. மலை ரயிலில் போக விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications