திருவாலங்காடு அருகே உயர் மின் கம்பி அறுந்தது : சென்னை - ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை பாதிப்பு
திருவள்ளூர் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால், சென்னை - ஜோலார்பேட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகேயுள்ள திருவாலங்காடு என்கிற இடத்தில் உயர் அழுத்த கம்பிகள் அறுந்து ரயில் பாதையில் விழுந்ததால், சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே திருவாலங்காடு என்கிற இடத்தில் 25 ஆயிரம் வாட்ஸ் திறன் கொண்ட உயர் மின்னழுத்த கம்பி அறுந்து ரயில் பாதையில் விழுந்ததால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து, அறுந்து கிடந்த மின்சார கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடந்த இரண்டு மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டு, அந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த 30ம் தேதி மாலை ஜோலார்பேட்டை அருகே மின்சார உயர் அழுத்தக் கம்பி விழுந்து, அந்தப்பாதையில் 5 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அப்போது மின்வாரிய அதிகாரிகள் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாததே, விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications