கோவை அருகே கோயிலுக்கு காவடி எடுத்து சென்ற பக்தர் காட்டு யானை தாக்கி பரிதாப சாவு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளிங்கிரி கோவிலுக்கு காவடி எடுத்துச் சென்ற பக்தர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி (55), அவரது மனைவி பழனியம்மாள் (50), உள்ளிட்ட அவரது உறவினர்கள் ஐந்து பேர் பூண்டி கோயிலுக்கு காவடி எடுத்துக்கொண்டு நேற்று சென்று கொண்டிருந்தனர். நேற்றிரவு சுமார் 10.15 மணி அளவில் பூண்டி அடிவாரம் அருகே உள்ள பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் செல்லும் வழியில் காட்டு யானை ஒன்று குறுக்கிட்டது.
யானையைக் கண்ட அவர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். அப்போது, யானையிடம் சுப்பிரமணி மாட்டிக் கொண்டார். இதனால், யானை தாக்கியதில் சுப்பிரமணி உயிரிழந்தார். யானை தாக்கியதில் பழனியம்மாளும் பலத்த காயமடைந்தார். காயமடைந்த பழனியம்மாள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.












Click it and Unblock the Notifications