கன்னியாகுமரி : கோயில் திருவிழாவில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு - பக்தர்கள் அதிர்ச்சி
கன்னியாகுமரி அருகே கோயில் விழா ஊர்வலத்தில் யானை தாக்கி பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி: கோயில் திருவிழா ஊர்வலத்தில் சென்ற யானை திடீரென தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு வெள்ளச்சிபாறை அருகே உள்ளது பத்திரகாளியம்மன் கோவில். மிகவும் பிரச்சித்தி பெற்ற இக்கோவிலின் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.

இக்கோவில் விழாவின் ஊர்வலத்தில் பங்கேற்க செய்ய, ஆண் யானை ஒன்றினை பாகன் கபீர் 25 என்பவர் கேரளாவிலிருந்து கொண்டு வந்திருந்தார்.
விழா ஊர்வலத்தில் பக்தர்களின் மத்தியில் யானை சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மிரண்டு ஓடியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். யானையை கட்டுக்குள் கொண்டு வர பாகன் கபீர் முயற்சி செய்தார்.
ஆனால், சரமாரியாக யானை தாக்கியதில் கபீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோயில் விழா ஊர்வலத்தில் யானை மிரண்டு பாகன் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications