பாரபட்சமாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்... தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
சென்னை: தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது.....

கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசால் செய்ய முடியாததை மத்தியில் நரேந்திரமோடி அரசு ஒரு ஆண்டில் நிறைவேற்றி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அரசு கஜானாவை காலியாக்கி விட்டது.
மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வது இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக தான். இலவசங்கள் வழங்காமல் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு தேவையான வளர்ச்சியை இந்த நாட்டிற்கு அவர் தந்து கொண்டிருக்கிறார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடும் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வளவு காலமும் திராவிட கட்சிகளுக்கு மக்கள் மாறி மாறி வாக்களித்து, ஏமாந்தது போதும். பா.ஜ.க. தலைமையில் ஒரு நல்லாட்சி தமிழகத்தில் அமைவதற்கு மக்கள் உதவ வேண்டும். பா.ஜ.க. வில் அதிகளவில் பெண்கள் இணைகிறார்கள். இலவசங்களை தந்து எத்தனை நாள் தான் நம்மை ஏமாற்றுவார்கள். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இன்னும் 2 நாளில் ஆராய்ந்து முடிவை அறிவிப்போம். சமீபத்திய இடைத்தேர்தல்களை பார்த்தபோது அங்கு நிலவிய சூழ்நிலைகள் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் விடைபெற்று கொள்ளலாம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை. நடுநிலை தவறிய தேர்தல் ஆணையத்தை வைத்து கொண்டு எப்படி தேர்தலை சந்திக்க முடியும் என்ற உணர்வு எல்லா கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications