எண்ணூர் துறைமுகத்தை விற்பனை செய்வதை கைவிட பிரதமர் மோடிக்கு ஊழியர்கள் வேண்டுகோள்
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை விற்பனை செய்யும் முடிவை கைவிட வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு துறைமுக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு துறைமுக ஊழியர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

எண்ணூர் துறைமுகமானது 2001-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இயங்கத் தொடங்கியது. இன்று சுமார் ரூ20,000 கோடி மதிப்பு கொண்டதாக இந்த துறைமுகம் வளர்ந்துள்ளது.
இத்துறைமுகத்தின் பங்குகளை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் எண்ணூர் துறைமுகம் இப்போது லாபகரமாகவே இயங்கி வருகிறது.
அப்படி லாபகரமாக இயங்கும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க வேண்டிய எந்த ஒரு தேவையுமே இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ1,000 கோடி வருவாய் ஈட்டித் தந்துள்ளது எண்ணூர் துறைமுகம்.
இந்த துறைமுகத்தில் 100 நேரடி ஊழியர்கள், அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இத்துறைமுகத்தால் 15,000 பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இவர்கள் நலன் கருதி நல்ல லாபத்தில் இயங்கும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு எண்ணூர் துறைமுக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications