நாடு முழுவதும் ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு!
நாடு முழுவதும் ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு முழுவதும் ஷெல் நிறுவனத்தின் 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
போலி பண பரிவர்த்தனை உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவதாக வந்த புகார் எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் ஷெல் நிறுவனத்தின 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனங்களில் போலி கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளதாக இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது. சென்னையில் ஷெல் நிறுவனத்தின் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் 303 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications