முத்துக்குமாரசாமி தற்கொலை: ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் நண்பர் வெங்டேசன் கைது
சென்னை: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், மூன்றாவது நபராக, வேளாண் துறை முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்திக்கு நெருக்கமான வெங்கடேசனை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவர்கள் பணிநியமனம் தொடர்பாக அமைச்சரும், அதிகாரிகளும் கொடுத்த மன உளைச்சலினால் வேளாண்மைத்துறை அதிகாரி, முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்து வரும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், முதற்கட்டமாக வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கடந்த 5ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு தூண்டுகோலாக இருந்தார் எனக்கூறி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் போல செயல்பட்ட வெங்கடேசன் என்பவரை, சனிக்கிழமை நள்ளிரவில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாஜிஸ்திரேட் முன், ஞாயிறன்று ஆஜர்படுத்தப்பட்ட அவர், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வட்டார தகவல்கள் கூறியதாவது:
முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக, அவரின் அலுவலக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் அ.தி.மு.க.,வினரிடம் விசாரித்ததில், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்காக, அவருடைய உதவியாளர் என சொல்லி, வெங்கடேசன் என்பவர், தொடர்ச்சியாக அலைபேசியில் பேசிய தகவல் தெரியவந்தது. விசாரித்ததில் வெங்கடேசன், வந்தவாசியில் இருந்து, சென்னைக்கு வந்து, எலக்ட்ரிகல் கான்டிராக்டர் வேலையை செய்து வந்தவர்; ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்தவர். நிலம் வாங்குவதில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பழக்கமாகி, அவருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது.
மிரட்டிய வெங்கடேசன்
இருவருக்கும் நிறைய கொடுக்கல், வாங்கலும் இருந்திருக்கிறது. அந்த வகையில் தான், அக்ரியின் பெயரை சொல்லி, அவர் பல விவகாரங்களில் தலையிட்டு உள்ளார்; அதற்கு, அக்ரியும் உடந்தையாக இருந்துள்ளார்.இப்படி தகவல் கிடைத்ததும், வெங்கடேசனை பின் தொடர ஆரம்பித்தோம். அவர் தொடர்பான எல்லா விவரங்களையும் திரட்டினோம். இதில் முத்துக்குமாரசாமியை, அவர் மிரட்டிய விவரங்கள் தெரியவந்தது. ஆதாரங்களும் கிடைத்தன; உடன், அவரையும் கைது செய்தோம்.
நாங்கள் வெங்கடேசன் குறித்து விசாரிக்கும் போது, தகவல் கசிந்துவிட, திருவண்ணாமலையில் இருக்கும், பீரங்கி வெங்கடேசன் என்ற கட்சிக்காரர் பெயரையும் இணைத்து வதந்திகள் கிளம்பின. அதனால், அவர் குறித்தும் விசாரித்தோம்.சொந்த கட்சி பிரச்னையில், அவரையும் இணைத்து ஆளுங்கட்சியினர் கிளப்பி விட்ட தகவல் என, தெரிந்ததும், அதை விட்டு விட்டோம் என்றனர்.
முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொறியாளர் (பொறுப்பு) செந்தில், வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையில், அடுத்தடுத்தும் கைது படலம் தொடரலாம் என சி.பி.சி.ஐ.டி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications