தூத்துக்குடியில் சஸ்பெண்ட் செய்ததற்காக கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற பி.இ. மாணவர்கள் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியின் முதல்வராக நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த சுரேஷ் குமார்(55) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் இருந்து கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு வந்த மாணவர்களில் சிலர், மாணவியரை கேலி செய்த காரணத்திற்காக 3 மாணவர்களை சஸ்பெண்ட் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் இன்று காலை கல்லூரி வளாகத்தில் வைத்து சுரேஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் குமார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனையடுத்து கொலையாளிகளான மாணவர்கள் டேனிஸ், பிச்சைக்கண்ணு, பிரபாகரன் ஆகிய மூவரை முறப்பநாடு போலீசார் கைது செய்தனர். டேனிஸ் சிவகங்கை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர். பிச்சைக்கண்ணு தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காய்யூரணியை சேர்ந்தவர். பிரபாகரன் நாகப்பட்டிணத்தை சேர்ந்தவர்.
புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த மாணவர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவிகளை நாங்கள் கேலி செய்யாத நிலையில் எங்கள் 3 பேரையும் முதல்வர் சுரேஷ் குமார் சஸ்பெண்ட் செய்தார். அத்துடன் எங்களை தரக்குறைவாகவும் பேசினார். அடிக்கடி எங்களிடம் அபராதம் விதித்து பணம் வசூலிக்கவும் காரணமாக இருந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தினாலேயே அவரை வெட்டிக் கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்த காரணத்திற்காக கல்லூரி முதல்வரை கல்லூரி மாணவர்களே வெட்டிக்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொலை செய்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications