புதுச்சேரி: என்ஜீனியரிங் கல்லூரி மாணவி கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் வினோதினி (18). இவர், கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் தொழிற்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவி வினோதினி, கல்லூரியின் 4வது மாடிக்கு சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த சக மாணவ- மாணவிகள் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால், மாணவர்கள் மாடிக்கு செல்வதற்குள் வினோதினி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து திருபுவனை காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காதல் விவகாரமா, வீட்டில் பிரச்னை என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மாணவியின் தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications