திமுகவினர் என்னை கழுவிக் கழுவி ஊத்துவது ஜாலியா இருக்கு: வக்கீல் சூர்யா
சென்னை: நாத்திகவாதியான அறிஞர் அண்ணா பற்றி ட்வீட் போட்டதற்காக திமுகவினர் தன்னை திட்டுவது ஜாலியாக உள்ளது என்று வழக்கறிஞர் சூர்யா என்பவர் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று அதிமுக அரசு சார்பில் 319 கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இது குறித்து வழக்கறிஞர் சூர்யா என்பவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
ஜோக்கா?
ஜோக்கா? நாத்திகவாதியான திமுக நிறுவனர் அண்ணாவின் நினைவாக 319 கோவில்களில் சிறப்பு பூஜை நடத்திய தமிழக அரசு. எம்.கே.(கருணாநிதி) என்ன தூங்குகிறாரா?
|
திருமணப் பத்திரிக்கை
டியர் திமுக மற்றும் திராவிடர் கழகம் ஆட்களே அண்ணாதுரையின் திருமண பத்திரிக்கையை பாருங்கள். இந்து மற்றும் சாதி அடையாளங்களை பாருங்கள்.
திட்டு
அண்ணா மற்றும் திமுக தலைவர் பற்றி ட்வீட் போட்ட சூர்யாவை திமுகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
|
திமுகவினர்
இதை போஸ்ட் செய்ததற்காக இன்று காலை முதல் திராவிடர்கள், திமுகவினர் என்னை திட்டுகிறார்கள். அது கூட ஜாலியாகத் தான் உள்ளது என்றே கூற வேண்டும் என்கிறார் சூர்யா.