47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எண்ணூர் அனல் மின்நிலையம் மூடல் !!
தமிழகத்தின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றான எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்படுகிறது.
சென்னை: 47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய அனல் மின் நிலையங்களில், சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையம் முக்கியமான ஒன்றாகும். இந்த அனல் மின்நிலையம் 1970 ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அனல் மின்நிலையத்தை, தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம் நிர்வகித்து வருகின்றது.

தற்போது அனல் நிலையத்தில், 1,070 நிரந்தர தொழிலாளர்கள், சுமார் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இங்குள்ள 5 அலகுகள் மூலம் சுமார் 450 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது. பழைய அலகுகள் அருகிலேயே, 660 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் ரூ.3.960 கோடி மதிப்பீட்டில் புதிய அனல் மின் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த கட்டுமானப் பணிகளை லான்கோ என்ற நிறுவனம் செய்து வருகின்றது. எண்ணூர் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால், மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, எண்ணணூர் அனல் மின் நிலையத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூடுவதற்கு தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகம் (TANGEDCO)முடிவெடுத்துள்ளது. அதன்படி அனல் மின்நிலையத்தில் உள்ள 5 அலகுகளில், ஐந்தாவது அலகு ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. மீதமுள்ள நான்கு அலகுகளையும் மூடுவதற்கான முடிவை மின்னுற்பத்திக் கழகம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியோடு மின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அனல் மின் நிலையத்தின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இங்கு பணியில் உள்ள ஊழியர்கள், பொறியாளர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications